Thursday, February 16, 2006

இந்த வளைப்பதிவு பிறந்த கதை


இன்று கொஞ்சம் சோர்வாக இருந்தது. எனவே, ஏதாவது வித்தியாசமாகச் செய்யலாமா என்று யோசித்தேன். அதன் விளைவுதான் இந்த விளக்கு. இது அணையா விளக்காய் என்றும் தொடரும். என் மனதில் பட்ட எண்ணங்களையும், நான் பார்த்த, கேட்ட, படித்த உபயோகமான விஷயங்களையும் இந்த இணைய விளக்கு உங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும். நான் வாழுமிடம் சிங்கப்பூர் என்றாலும், என் இதயம் இருக்குமிடம் இந்தியாதான். எனவே, இந்தப் பதிவில், சிங்கப்பூர் விஷயங்களும், இந்திய நிகழ்வுகளும் சேர்ந்தே இடம்பெறும். இந்தப் பதிவை 'விலக்கு' என்று எண்ணி விலக்கி விடாமல், இந்த விளக்கின் ஒளியிலே திளைத்து மகிழுங்கள்!!

இந்த இணைய விளக்கு, இணைய வானில் ஒரு மின் மினிப் பூச்சியாய், என் எண்ண ஒளியை உலகெங்கும் கொண்டு சேர்க்கட்டும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!