Tuesday, May 23, 2006

காரண - காரியத் தொடர்பு


நமக்காக என்ன நடக்கவுள்ளதோ அது நமக்காக நடக்கத்தான் செய்யும்; எதுவும் நடப்பது நமது நன்மைக்காகத்தான். கடலலை வீசுவதில்லை; அது வீசுவிக்கப்படுகின்றது. மழை தானாகக் கொட்டுவதில்லை; அது ஒரு செயற்பாடாகவே இயக்கப்படுகின்றது. காலங்களும் காலநிலைகளும் சம்பவங்களும் காரணமின்றித் தானாகவே நடப்பதில்லை; ஒன்றில் ஒன்று ஒட்டி நின்றே நடந்தேறுகின்றன.

காரியங்களனைத்துமே காரணங்களோடுதான் நடக்கின்றன. ஒரு முன்கூட்டியே அமைத்துவிடப்பட்ட மாறாத விதிமுறைப்படியேதான் இயற்கையின் எல்லா இயக்கங்களுமே இயங்குகின்றன.

என்றோ, எதற்கோ, எப்படியோ நடந்துவிடும் சம்பவங்கள் இன்று இதற்காகத்தான் இவ்வாறு நிகழ்ந்தனவோ என்று நம்மை எண்ண வைப்பதுண்டு. நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இந்த அனுபவத்தை ஏதோ ஒருவிதத்தில் நாம் உணர்ந்திருப்போம்.

0 Comments:

Post a Comment

<< Home